Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மோகனகிருஷ்ணன் என்கெளண்டர்: விஜய்-குஷ்பு பாராட்டு!
இளம் சிறுமியைக் கற்பழித்தும், அவளது தம்பியை கொடூரமாக கிணற்றில் வீசியும் கொன்ற மோகனகிருஷ்ணனை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என ஆவேசப்பட்டிருந்தார் விஜய்.
இந்த நிலையில், மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். தமிழக மக்கள் அனைவரும் போலீசாரின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா நட்சத்திரங்களும் போலீசாருக்கு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
முன்னணி நடிகர் விஜய், இதுகுறித்துக் கூறுகையில், "கொலைகாரன் மோகனகிருஷ்ணனை தூக்கில் போட வேண்டும் என்று நான் கூறினேன். அதை கோபத்தில் கூறியிருந்தாலும், மனசார வேதனைப்பட்டுதான் சொன்னேன். ஆனால் நம் நாட்டு சட்டத்தில் அதற்கு இடமில்லை. அது எனக்கும் தெரியும். ஆனால் இப்போது நான் மிகுந்த சந்தோஷமடைந்துள்ளேன். இது அந்த கொடியவனுக்கு கடவுளே கொடுத்த தண்டனை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்...", என்றார்.
இதுவே லேட்- நடிகை குஷ்பு!
நடிகை குஷ்பு கூறுகையில், "மோகன கிருஷ்ணனை கொன்றது தப்பே இல்லை. என்னைக் கேட்டால் இந்த என்கவுன்டரே கூட தாமதமான தண்டனை என்றுதான் சொல்வேன்", என்றார்.
நடிகர் கருணாஸ் கூறுகையில், "மோகனகிருஷ்ணனை மாதிரி ஆட்களை விட மிருகங்கள் பல மடங்கு உயர்ந்தவை. நன்றியும் பாசமும் மிக்கவை. அந்த கொடூர கொலையாளியை கொன்றது மிகச் சரியான நடவடிக்கை. இது தொடர வேண்டும். அப்போதுதான் இந்த மாதிரி கொடூரமானவர்களுக்கு புத்தி வரும்" என்றார்.