Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'எவன்டி உன்னைப் பெத்தான்...': சிம்புவுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்
வானம் படத்தில் சிம்பு பாடிய, எவன்டி உன்னைப் பெத்தான் பாடல் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற வேதம் படத்தை, சிம்பு நடிக்க வானம் என்ற பெயரில் எடுத்துவருகின்றனர். சிம்புதான் இப்படத்தின் நாயகன். அனுஷ்கா நாயகியாக நடித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. இதில் அவரே ஒரு பாடலை எழுதி பாடவும் செய்துள்ளார். 'எவனடி உன்ன பெத்தான், அவன் கைல கிடைச்சா செத்தான்...', என்று துவங்கும் இப்பாடல் மட்டும் ஒரு சிடியில் வெளியிடப்பட்டது. பெரிய ஹிட் பாடலாக இது மாறியுள்ளது.
இந்த நிலையில், இந்த பாடலுக்கு மகளிர் அமைப்புகளிடம் இப்போது பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அனைத்திந்திய பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவி சாந்தி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர் சிம்பு எழுதிய பாடல் வரிகள், பெண்கள் மனதை காயப்படுத்துவது போல் உள்ளது.
எவன்டி உன்ன பெத்தான் அவன் கைல கிடைச்சா செத்தான் என்பவை தரமற்ற வரிகள், பாடல் எழுத வரைமுறைகள் உள்ளது. இழிவான வரிகளை பாடலுக்கு பயன்படுத்துவது இளைய சமுதாயத்தினரின் மனப்போக்கில் மாசு ஏற்படுத்தும்.
ராகிங் செய்பவர்களுக்கு ஏதுவாக இந்தப் பாட்டு அமைந்துவிட்டது. சினிமா ொரு சக்தி வாய்ந்த ஊடகம். அதில் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களை எளிதில் சென்று அடைகின்றனர். எனவே சிம்பு போன்ற வர்கள் பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டும். அந்த பாடலில் உன் மானம் காக்கிற மேல் ஆட நான்தான் என்றும் எழுதி இருக்கிறார்.
இது ஆபாசமானது. பொதுவாகவே சிம்பு படங்களில் பெண்ணினத்துக்கு எதிரான வன்மங்கள் தூக்கலாக உள்ளன. பெண்களுக்கு மரியாதை செய்வது போன்ற காட்சிகள் வைப்பதில்லை. முன்பு அவரது ஒரு படத்துக்காக சென்னையில் ஒட்டப்பட்டிருந்த முத்தக் காட்சி போஸ்டர்களே இதற்கு சான்று. சிம்பு தனது சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும்...", என்று கூறியுள்ளார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்