Don't Miss!
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தேர்தலில் போட்டி - நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு வந்துருச்சி எம்எல்ஏ ஆசை!
ஆந்திர மாநில சட்ட சபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முக்கிய கட்சிகள் இப்பொழுதே தயாராகி வருகின்றன.சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா போட்டியிட உள்ளார் என்று ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது.
இவர் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் மகன். சந்திரபாபு நாயுடுவின் மைத்துனர். பாலகிருஷ்ணா அரசியலில் தீவிர ஆர்வம் காட்டாமல் சினிமாவில அதிக கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது ஆந்திர அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை பலப்படுத்தி வரும் சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க அதன் தலைவர் சந்திரபாபுநாயுடு திட்டம் வகுத்துள்ளார். இதன்படி தேர்தல் பிரசாரத்திலும், வேட்பாளர்கள் தேர்விலும் பிரபலங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடிகர் பால கிருஷ்ணாவை ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைக்கவும் முடிவாகி உள்ளது. இதற்கு அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பாலகிருஷ்ணா கூறுகையில், "தெலுங்கு தேசம் கட்சி வெற்றிக்காக இனி நானும் தீவிரமாக களமிறங்கப் போகிறேன். ஆந்திராவில் கட்சியை பலப்படுத்த என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வேன். வருகிற சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளேன். கட்சி மேலிடம் சொல்லும் இடத்தில் நிற்பேன்," என்றார்.