Don't Miss!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தேர்தலில் போட்டி - நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு வந்துருச்சி எம்எல்ஏ ஆசை!
ஆந்திர மாநில சட்ட சபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முக்கிய கட்சிகள் இப்பொழுதே தயாராகி வருகின்றன.சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா போட்டியிட உள்ளார் என்று ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது.
இவர் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் மகன். சந்திரபாபு நாயுடுவின் மைத்துனர். பாலகிருஷ்ணா அரசியலில் தீவிர ஆர்வம் காட்டாமல் சினிமாவில அதிக கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது ஆந்திர அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை பலப்படுத்தி வரும் சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க அதன் தலைவர் சந்திரபாபுநாயுடு திட்டம் வகுத்துள்ளார். இதன்படி தேர்தல் பிரசாரத்திலும், வேட்பாளர்கள் தேர்விலும் பிரபலங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடிகர் பால கிருஷ்ணாவை ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைக்கவும் முடிவாகி உள்ளது. இதற்கு அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பாலகிருஷ்ணா கூறுகையில், "தெலுங்கு தேசம் கட்சி வெற்றிக்காக இனி நானும் தீவிரமாக களமிறங்கப் போகிறேன். ஆந்திராவில் கட்சியை பலப்படுத்த என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வேன். வருகிற சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளேன். கட்சி மேலிடம் சொல்லும் இடத்தில் நிற்பேன்," என்றார்.