Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கெளதம் இயக்கத்தில் அஜீத்!
சந்திரமுகிக்குப் பிறகு சிவாஜி பிலிம்ஸ் இந்தியில் ஒரு படம் இயக்கியது. இப்போது மறுபடியும் தமிழுக்குத் திரும்புகிறது. இந்த முறை சிவாஜியுடன் கை கோர்க்கப் போவது அஜீத்.
இப்படத்தை இயக்கவிருப்பவர் கெளதம் மேனன். தற்போது ராஜு சுந்தரம் இயக்கத்தில், ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஏகன் படத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கிறார். இதை முடித்து விட்டு சிவாஜி பிலிம்ஸுக்கு வருகிறார்.
அஜீத்தும், கெளதமும் இணைவது இதுவே முதல் முறை. இப்படத்திற்கு கெளதமின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்கிறார்.
இது அதிரடிப் படமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் பிரபு தெரிவித்துள்ளார். படத்திற்கு பாலிவுட் நாயகி ஒருவரை ஹீரோயினாகப் போட முடிவு செய்துள்ளனர். அதுதொடர்பாக சிலருடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.
இப்படத்தை செப்டம்பர் மத்தியில் ஆரம்பிக்கலாம் என அஜீத் கூறியுள்ளாராம். இப்படத்தில் பிரபவும் இருக்கிறாராம்.
சரி, புதிய பறவையை ரீமேக் செய்யப் போவதாக கூறுகிறார்களே என்று பிரபுவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. அப்பாவின் எந்தப் படத்தையும் திரும்ப எடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.