Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
களவாணி நாயகனும் ரூ 40 லட்சம் சம்பள பஞ்சாயத்தும்!
ஒரு படம் சுமாராக ஓடினாலே, சம்பளத்தை உச்சாணிக்கு ஏற்றுவது தமிழ் ஹீரோக்களின் வழக்கம். 'களவாணி' விமல் மட்டும் விலக்காகிவிடுவாரா...
பசங்க படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விமல். களவாணி படத்தில் கதாநாயகனானார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது தூங்கா நகரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
களவாணிக்கு முன்பே அவர் கலிங்கத்துப் பரணி என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாராம். இதற்கு ரூ 6 லட்சம் சம்பளமாக பேசப்பட்டதாம். அதற்குள் களவாணி வெளியாகி, பெரும் வெற்றிப் படமாகிவிட, இப்போது சம்பளத்தை கிர்ரென்று ரூ 40 லட்சமாக உயர்த்தி, தயாரிப்பாளரை கிறுகிறுக்க வைத்துள்ளார்.
உடனே, கலிங்கத்துப் பரணியைத் தயாரிக்கும் ஏ.கே.மூவீஸ் நிறுவனமும் அப்படத்தின் இயக்குனர் ஐந்து கோவிலானும் தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் அளித்தனர்.
நடிகர் சங்கம் தரப்பில் விமலை அழைத்து பேசினர். சம்பளத்தை குறைக்கும்படி வற்புறுத்தினர். இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய சம்பளத்தை நடிகர் சங்கம் நிர்ணயம் செய்து பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளது.