twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    களவாணி நாயகனும் ரூ 40 லட்சம் சம்பள பஞ்சாயத்தும்!

    By Chakra
    |

    ஒரு படம் சுமாராக ஓடினாலே, சம்பளத்தை உச்சாணிக்கு ஏற்றுவது தமிழ் ஹீரோக்களின் வழக்கம். 'களவாணி' விமல் மட்டும் விலக்காகிவிடுவாரா...

    பசங்க படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விமல். களவாணி படத்தில் கதாநாயகனானார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது தூங்கா நகரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    களவாணிக்கு முன்பே அவர் கலிங்கத்துப் பரணி என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாராம். இதற்கு ரூ 6 லட்சம் சம்பளமாக பேசப்பட்டதாம். அதற்குள் களவாணி வெளியாகி, பெரும் வெற்றிப் படமாகிவிட, இப்போது சம்பளத்தை கிர்ரென்று ரூ 40 லட்சமாக உயர்த்தி, தயாரிப்பாளரை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

    உடனே, கலிங்கத்துப் பரணியைத் தயாரிக்கும் ஏ.கே.மூவீஸ் நிறுவனமும் அப்படத்தின் இயக்குனர் ஐந்து கோவிலானும் தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் அளித்தனர்.

    நடிகர் சங்கம் தரப்பில் விமலை அழைத்து பேசினர். சம்பளத்தை குறைக்கும்படி வற்புறுத்தினர். இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய சம்பளத்தை நடிகர் சங்கம் நிர்ணயம் செய்து பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X