Don't Miss!
- News ஜெய் ஸ்ரீராம் போலோ.. "பிஸ்னஸ் மேன்" கையை தூக்கிய கேப்பில்! ரூ.36000 அபேஸ்! பாஜக பிரச்சாரத்தில் திக்
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
களவாணி நாயகனும் ரூ 40 லட்சம் சம்பள பஞ்சாயத்தும்!
ஒரு படம் சுமாராக ஓடினாலே, சம்பளத்தை உச்சாணிக்கு ஏற்றுவது தமிழ் ஹீரோக்களின் வழக்கம். 'களவாணி' விமல் மட்டும் விலக்காகிவிடுவாரா...
பசங்க படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விமல். களவாணி படத்தில் கதாநாயகனானார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது தூங்கா நகரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
களவாணிக்கு முன்பே அவர் கலிங்கத்துப் பரணி என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாராம். இதற்கு ரூ 6 லட்சம் சம்பளமாக பேசப்பட்டதாம். அதற்குள் களவாணி வெளியாகி, பெரும் வெற்றிப் படமாகிவிட, இப்போது சம்பளத்தை கிர்ரென்று ரூ 40 லட்சமாக உயர்த்தி, தயாரிப்பாளரை கிறுகிறுக்க வைத்துள்ளார்.
உடனே, கலிங்கத்துப் பரணியைத் தயாரிக்கும் ஏ.கே.மூவீஸ் நிறுவனமும் அப்படத்தின் இயக்குனர் ஐந்து கோவிலானும் தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் அளித்தனர்.
நடிகர் சங்கம் தரப்பில் விமலை அழைத்து பேசினர். சம்பளத்தை குறைக்கும்படி வற்புறுத்தினர். இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய சம்பளத்தை நடிகர் சங்கம் நிர்ணயம் செய்து பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளது.