Don't Miss!
- News ஆளுநர் பதவியையே துறந்து தமிழிசை களமிறக்கப்பட்டுள்ளாரே.. நிர்மலா, ஜெய்சங்கர் ஏன் போட்டியிடவில்லை?
- Sports எங்களை ஏமாற்ற பார்க்காதீங்க! நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி.. GT போட்டியில் நடந்தது என்ன?
- Lifestyle உங்க தலையணை இந்த மாதிரி இருந்தா நீங்க தலைவலி முதல் பல ஆபத்தான பிரச்சினைகள் வரை சந்திக்க வேண்டியிருக்குமாம்...!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவதுகூட முட்டாள்தனம் - ரகுராம் ராஜன்
- Automobiles 6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
எனக்கு 'அரிப்பு' இருப்பதால்தான் தொடர்ந்து நடிக்கிறேன்!-கமல்
50 ஆண்டுகள் தொடர்ந்து நான் நடிப்பது புல்லரிக்க வைப்பதாகக் கூறுகிறார்கள்... எனக்கு அரிப்பு இருப்பதால்தான் தொடர்ந்து நடிக்கிறேன், என்றார் கமல் ஹாஸன்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
முதல் சிடியை ரஹ்மான் வெளியிட கமல் ஹாசன் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய அனைவருமே சுருக்கமாகப் பேசி முடித்துக் கொண்டனர். ஆனால் படத்தின் இயக்குநர் கவுதம் மேனன் மட்டும் 'ரொம்பப் பேசினார்'. கிட்டத்தட்ட இந்தப் படம் அவரது சொந்தக் காதல் கதை போலிருக்கிறது.
"நான் திரையுலகுக்கு வந்து 50 வருடம் ஆவதாகவும், 50 ஆண்டுகளுக்கு முன் லைட்ஸ் ஆன் என்பதைக் கேட்டபோது இருந்த புல்லரிப்பு இன்றும் தொடர்வதாகவும் குறிப்பிட்டனர். எனக்கும் அந்த அரிப்பு இருப்பதால்தான் இன்னும் நடிக்கிறேன்.
சிம்பு சிறுவயதில் இருந்தே நடித்துக் கொண்டு இருக்கிறார். அவரை நினைத்தாலும் புல்லரிக்கிறது. சிம்பு சொன்னமாதி அழகாக உள்ளார் த்ரிஷா. இசையும் சிறப்பாக உள்ளது", என்றார்.
விழாவில் பேசிய சிம்பு, "நான் இந்தப் படத்தில் அழகாக இருப்பதாகக் கூறினார்கள்... நான் எப்பவுமே அழகாகத்தான் இருக்கேன்!" என்று தமாஷ் பண்ணார்.
இந்தப் படத்தின் 3 பாடல்களை திரையிட்டனர். முன்னதாக இந்தப் பாடல்களை ரஹ்மான் இசைக் குழுவினர் லைவாக பாடிக் காட்டினர்.