ரஜினி விருந்தும் அறிவிப்பும்... 'கெட் ரெடி ஃபோக்ஸ்!'
சூப்பர் ஸ்டார் ரஜினி தனது அடுத்த படம் சத்யா மூவீசுக்கு என்பதை முடிவு செய்து, கதையைத் தயார் செய்யச் சொல்லிவிட்டுத்தான் இமயமலைக்குப் பயணமாகியிருக்கிறார்.
சத்யா மூவீஸ் அலுவலகம் இப்போதே கல்யாண வீட்டு எஃபெக்டுடன் ரஜினி படத்துக்கான ஏற்பாடுகளில் பரபரத்துக் கொண்டிருக்கிறது. இப்போதே வடக்கிலிருந்து ஏகப்பட்ட விசாரணைகளாம்.
இமயமலைக்குச் சென்றிருக்கும் ரஜினி, இன்னும் மூன்று வாரங்கள் கழித்து சென்னைக்குத் திரும்புகிறார்.
வந்ததும் அவரது முதல் வேலை, சௌந்தர்யா கல்யாணம், எந்திரனின் மெகா வெற்றி ஆகியவற்றுக்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பதுதான் என்கிறார்கள். கூடவே, கஷ்டப்படும் சில ரசிகர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவி, திருமண உதவி என்று அவரது உதவிப் பட்டியல் நீள்கிறது.
"எதைச் செய்தாலும் மனசார, நிறைவாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர் ரஜினி. அரைகுறையாக ஒரு விஷயத்தைச் செய்யப் போய், அது தனக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அவர் போட்டுக் கொடுத்த பிளான்படி விருந்து நிகழ்ச்சி நிறைவேறினால், இந்தியாவே மலைத்துப் போகும் அளவு சிறப்பான நிகழ்வாக அது அமையும்", என்கிறார் மண்டபப் பிரமுகர் ஒருவர்.
இந்த விருந்தின் போதே, தனது அடுத்தபட அறிவிப்பு மற்றும் சில திட்டங்கள் குறித்தும் அறிவிக்கப் போகிறாராம்!


Click it and Unblock the Notifications











