Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மகளுடன் வந்து ஓட்டுப் போட்டார் ரஜினி - அரசியலுக்கு வருவது குறித்து மெளன பதில்
சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது மகள் செளந்தர்யாவுடன் இன்று காலை 8.45 மணிக்கு ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரிக்கு வந்தார்.
அங்குள்ள வாக்குச் சாவடியில் ரஜினியும், செளந்தர்யாவும் வாக்களித்தனர்.
பின்னர் வெளியில் வந்த ரஜினியை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.
வழக்கம் போல யாருக்கு ஓட்டுப் போட்டீங்க என்று செய்தியாளர்கள் கேட்டபோது, யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்பதை வெளியில் சொல்ல மாட்டேன். ஆனால் ஓட்டுப் போட வேண்டியது நமது கடமை.
ஓட்டுப்போடுவதை யாரும் தவிர்க்கக் கூடாது. எல்லாரும் கண்டிப்பாக தங்கள் ஓட்டை போட வேண்டும் என்றார் ரஜினி.
பின்னர் வழக்கம் போல அரசியல் பிரவேசம் குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர். இந்த முறை சற்று வித்தியாசமாக, எதிர்காலத்தில் மக்கள் இது போன்று உங்களுக்கு ஓட்டு போடும் நிலை வருமா என்று கேட்டனர்.
செய்தியாளர்கள் கில்லாடி என்றால் ரஜினி கில்லாடிக்கு கில்லாடி ஆச்சே. ஹா.. ஹா.. ஹா.. சிரித்துக் கொண்டே, பதில் ஏதும் சொல்லாமல், எல்லாம் அவன் செயல் என்பதை உணர்த்தும் விதமாக, வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்திக் காட்டி விட்டுச் சென்று விட்டார்.