சிபிராஜின் காதல் கதை!

மணமகள் பெயர் ரேவதி. வெங்கடேஸ்வரா இஞ்ஜினியரிங் கல்லூரியில் பட்டம் பெற்றவர். ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரது சொந்த ஊர் கடலூர். முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். சிபிராஜ் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர்.
இருவரும் மிகத் தீவிரமாகக் காதலிப்பதை அறிந்த பெற்றோர் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொண்டனர்.
அதன்படி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு விட்டது. செப்டம்பர் 17-ம் தேதி சிபிக்கும் ரேவதிக்கும் சென்னை அக்கார்ட் இன் ஹோட்டலில் திருமணம் நடக்கிறது. அடுத்த நாளே மேயர் ராமநாதன் மண்டபத்தில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











