Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்
தொடர் தோல்விகளுக்குரிய இழப்பீட்டை நடிகர் விஜய் தரும் வரை அவரது படங்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, சங்க தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரோகிணி ஆர்.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில்,
விஜய் நடித்த குருவி, வில்லு, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சுறா ஆகிய 5 படங்கள் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த படங்களுக்காக திரையரங்க உரிமையாளர்கள் கொடுத்த பணத்தில், 35 சதவீத தொகையை விஜய் திருப்பி தர வேண்டும் என்று ஏற்கனவே கேட்டு இருந்தோம். இதுவரை விஜய் திருப்பி தரவில்லை. அவர் நஷ்ட ஈடு தொகையை தரும் வரை, அவருடைய படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதவிர உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டை நடத்திய முதல்வருக்குப் பாராட்டு தெரிவித்தும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி ராம.நாராயணன் அணியினருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.