Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அஜீத்தின் 50வது படம்-இயக்கம் கெளதம்!
அஜீத்தும் கெளதம் மேனனும் சிவாஜி பிலிம்ஸ் இப்போது தயாரித்துக் கொண்டுள்ள படத்திலேயே இணைவதாக இருந்தது. கதை விவாதம் நடந்து படத்துக்கு சுராங்கனி என்று பெயர் கூட சூட்டிவிட்டார்கள். ஆனால் படம் தொடங்குவதற்குள் இருவருக்கும் சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படாததால் விலகிவிட்டனர்.
அந்த வாய்ப்புதான் பின்னர் சரணுக்கு தரப்பட்டது.
இப்போது அஜீத்தின் பொன்விழாப் படத்தை இயக்கும் வாய்ப்பு கெளதம் மேனனுக்கு தரப்பட்டுள்ளது. இந்தப் படத்தை துரை தயாநிதி தனது கிளெட் நைன் மூவீஸ் மூலம் தயாரிக்கிறார்.
ஏற்கெனவே கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தை வாங்கி வெளியிட்டவர் துரை தயாநிதிதான் என்பது நினைவிருக்கும்.
ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நாயகி மற்றும் பிற விவரங்கள் விரைவில் வெளியாகும் என அஜீத் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்துக்கு புதிய தலைப்பு தேடும் வேலையில் மும்முரமாக உள்ளாராம் கெளதம் மேனன். சுராங்கனி தலைப்பு நன்றாக இருந்தாலும், அந்தத் தலைப்பு இப்போதைக்கு பிரச்சினை கிளப்பும் என்பதால் வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஜீத்.