Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அஜீத்தின் 50வது படம்-இயக்கம் கெளதம்!
அஜீத்தும் கெளதம் மேனனும் சிவாஜி பிலிம்ஸ் இப்போது தயாரித்துக் கொண்டுள்ள படத்திலேயே இணைவதாக இருந்தது. கதை விவாதம் நடந்து படத்துக்கு சுராங்கனி என்று பெயர் கூட சூட்டிவிட்டார்கள். ஆனால் படம் தொடங்குவதற்குள் இருவருக்கும் சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படாததால் விலகிவிட்டனர்.
அந்த வாய்ப்புதான் பின்னர் சரணுக்கு தரப்பட்டது.
இப்போது அஜீத்தின் பொன்விழாப் படத்தை இயக்கும் வாய்ப்பு கெளதம் மேனனுக்கு தரப்பட்டுள்ளது. இந்தப் படத்தை துரை தயாநிதி தனது கிளெட் நைன் மூவீஸ் மூலம் தயாரிக்கிறார்.
ஏற்கெனவே கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தை வாங்கி வெளியிட்டவர் துரை தயாநிதிதான் என்பது நினைவிருக்கும்.
ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நாயகி மற்றும் பிற விவரங்கள் விரைவில் வெளியாகும் என அஜீத் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்துக்கு புதிய தலைப்பு தேடும் வேலையில் மும்முரமாக உள்ளாராம் கெளதம் மேனன். சுராங்கனி தலைப்பு நன்றாக இருந்தாலும், அந்தத் தலைப்பு இப்போதைக்கு பிரச்சினை கிளப்பும் என்பதால் வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஜீத்.