Don't Miss!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அஜீத்தின் 50வது படம்-இயக்கம் கெளதம்!
அஜீத்தும் கெளதம் மேனனும் சிவாஜி பிலிம்ஸ் இப்போது தயாரித்துக் கொண்டுள்ள படத்திலேயே இணைவதாக இருந்தது. கதை விவாதம் நடந்து படத்துக்கு சுராங்கனி என்று பெயர் கூட சூட்டிவிட்டார்கள். ஆனால் படம் தொடங்குவதற்குள் இருவருக்கும் சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படாததால் விலகிவிட்டனர்.
அந்த வாய்ப்புதான் பின்னர் சரணுக்கு தரப்பட்டது.
இப்போது அஜீத்தின் பொன்விழாப் படத்தை இயக்கும் வாய்ப்பு கெளதம் மேனனுக்கு தரப்பட்டுள்ளது. இந்தப் படத்தை துரை தயாநிதி தனது கிளெட் நைன் மூவீஸ் மூலம் தயாரிக்கிறார்.
ஏற்கெனவே கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தை வாங்கி வெளியிட்டவர் துரை தயாநிதிதான் என்பது நினைவிருக்கும்.
ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நாயகி மற்றும் பிற விவரங்கள் விரைவில் வெளியாகும் என அஜீத் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்துக்கு புதிய தலைப்பு தேடும் வேலையில் மும்முரமாக உள்ளாராம் கெளதம் மேனன். சுராங்கனி தலைப்பு நன்றாக இருந்தாலும், அந்தத் தலைப்பு இப்போதைக்கு பிரச்சினை கிளப்பும் என்பதால் வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஜீத்.