twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயன்தாராவுடன் போய் குருவாயூர் கோயிலில் பிரபுதேவா காணிக்கை!

    By Shankar
    |

    காதலி நயன்தாராவை மணம் முடிக்கும் முன், குருவாயூர் கோயிலில் காணிக்கை செலுத்தி வேண்டிக் கொண்டார் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா.

    நடிகர் பிரபுதேவா காதலி நயன்தாராவுடன் கேரளாவில் தங்கி திருமண ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். கொச்சி அல்லது மும்பையில் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது.

    கோயிலுக்குள் வராத நயன்...

    இதற்கிடையே, நேற்று பிரபுதேவா நயன் தாராவுடன் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். நயன்தாரா கிறிஸ்தவர் என்பதால் அவர் காரிலேயே அமர்ந்து கொண்டார்.

    பிரபுதேவா தனது கார் டிரைவருடன் கோவிலுக்குள் சென்று 15 நிமிடங்கள் வழிபட்டார். பின்னர் தங்க பட்டுச்சேலைக்குள் தாலியை வைத்து மேல்சாந்தியிடம் காணிக்கையாக கொடுத்து வழிபட்டார். அதோடு, வாழைக் குலை மற்றும் ஒரு கட்டு ரூபாய் நோட்டு, சந்தனம், நல்லெண்ணெய் ஆகியவற்றையும் காணிக்கையாக வழங்கினார்.

    பிரபுதேவா கோவிலுக்கு வந்துள்ளார் என்பதை அறிந்த ரசிகர்கள் அவரைக் காண அங்கு திரண்டனர். இதனால் பிரபுதேவா அங்கிருந்து அவசர, அவசரமாக கிளம்பினார். பின்னர் நயன்தாராவுக்கு சொந்தமான அரியானூர் சாந்திமடம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றனர் இருவரும்.

    English summary
    Actor, Director Prabhu Deva gave his offerings to Lord Krishnan at Guruvayur Temple and pray for his marriage with actress Nayanthara.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X