ரோட்டில் 'உச்சா' அடித்து போலீசிடம் சி்க்கிய ரன்பிர் கபூர்!
தாங்கள் செய்தது தவறேயானாலும் அது சரிதான் என்று வாதாடுபவர்களுக்கு மத்தியில் தான் செய்த தவறைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர்.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிய ரன்பிர் கபூர் தான் தவறு செய்து போலீசில் சிக்கியது பற்றி தெரிவி்ததார்.
அதன் விவரம் வருமாறு,
ரன்பிர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கர்கட்டில் இருந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். நீண்ட தூரம் பயணம் செய்த அவருக்கு அவசரமாக 'உச்சா' வந்துள்ளது. உடனே காரை நிறுத்திவிட்டு ரோட்டோரமாக உச்சா அடித்துள்ளார். அந்நேரம் பார்த்து நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசார் அங்கு வந்துள்ளனர். ரன்பிரைப் பார்த்து என்ன சார் இது. பெரிய ஸ்டாரா இருந்துக்கிட்டு இப்படி செய்கிறீர்களே என்று கேட்டுள்ளனர். (ஸ்டாரா இருந்தாலும் வந்தா போய்த்தானே ஆகணும்!)
உடனே ரன்பிர் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதன் பிறகு அவர்கள் ரன்பிரை விட்டுவிட்டனர். இதை ரன்பிர் கபூரே தன் வாயால் தெரிவித்துள்ளார்.
பரவாயில்லை, தான் அசிங்கப்பட்டதைக் கூட மறைக்காமல் சொல்லியிருக்கிறார் ரன்பிர்!.


Click it and Unblock the Notifications












