Don't Miss!
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- Automobiles ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
- News ‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம
- Sports முதல் பந்திலேயே சிக்ஸ்.. யாருப்பா தம்பி நீ.. இப்படி அடிக்கிற.. கங்குலி ரியாக்சனை பாருங்க!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தோட்டாவுடன் விமானம் ஏற வந்த நடிகர் சன்னி தியோலின் மேக்கப் மேன் கைது
சன்னியின் மேக்கப் மேன் ஹேமந்த் ஜாதவ். இவர் மும்பை விமான நிலையத்திற்கு நேற்று இரவு எட்டே முக்கால் மணியளவில் வந்தார். நியூயார்க் செல்வதற்காக அவர் வந்திருந்தார். அப்போது அவர் வைத்திருந்த பேக் சோதனையிடப்பட்டது. அதில், 7 துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்ததை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது இவற்றை நடிகர் சன்னி தியோலிடம் தருவதற்காக செல்வதாக கூறினார் ஜாதவ்.
நியூயார்க்கில் நடிகை கங்கனா ரணவத்துடன், நடித்து வரும் படத்திற்கான ஷூட்டிங்கில் சன்னி தியோல் இருப்பதாகவும், ஒரு பையைக் கூறி அந்தப் பையுடன் கிளம்பி வருமாறும் அவர் கூறினார். இதனால்தான் நான் இந்தப் பையுடன் கிளம்பினேன் என்று கூறினார் ஜாதவ்.
இதையடுத்து சாஹர் காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் வந்து பையைக் கைப்பற்றியதுடன், ஜாதவையும் கைது செய்தனர். மேலும், நடிகர் சன்னி தியோல் வைத்திருக்கும் துப்பாக்கி முறையாக உரிமம் பெற்றதா என்பதையும் விசாரித்து வருகின்றனர்.