Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தேவயானி தம்பிக்கு தடை?
அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநாடு சென்னையில் மூன்று நாட்கள் நடந்தது. இந்த மூன்று நாட்களும் எந்தப் படப்பிடிப்பும் நடக்கக் கூடாது, ஸ்டுடியோக்களும் இயங்கக் கூடாது என சினிமா அமைப்புகள் அனைத்தும் ஒரு சேர முடிவு செய்திருந்தன.
அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விடுமுறை விடப்பட்டது. கலந்து கொள்ளாத நடிகர் நடிகைகள் மீது கடும் நடவடிக்கை என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் காதலில் விழுந்தேன், மாசிலா மணி படங்களின் நயாகனும், தேவயானியின் தம்பியுமான நகுலன் இந்த அறிவிப்புக்கு மாறாக மாநாட்டில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டார். இதனால், அவருக்கு தடை விதிக்க ஃபெப்ஸி முடிவு செய்துள்ளது.
இதையடுத்து அவர் நடிக்கும் 'கந்தகோட்டை' படத்தில் பணிபுரிய மாட்டோம் ஃபெப்ஸி அமைப்பு அறிவித்துள்ளது.
மாசிலாமணி படம் தயாரித்த கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம்தான் கந்தகோட்டை உரிமையைப் பெற்றுள்ளது.