Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரஜினி குணமடைந்ததால் விருது கொண்டாட்டங்கள் ஆரம்பம்! - தனுஷ்
ரஜினி பூரணமாகக் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்துவிட்டதால், தனக்கு தேசிய விருது பெற்றதற்கான் கொண்டாட்டங்களை இனி ஆரம்பிக்கப்போவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
ரஜினி உடல்நலக் குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், அவரது மருமகன் தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தது. ஆடுகளம் படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது.
ஆனாலும், இந்த சந்தோஷத்தை தனுஷ் கொண்டாடவில்லை. தனக்குக் கிடைத்த விருதினை ரஜினிக்கு சமர்ப்பிப்பதாகவும், அவர் நலம் பெற்ற எழுந்துவந்த பிறகே, விருது கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடுவேன் என்றும் தனுஷ் கூறியிருந்தார்.
சிங்கப்பூரில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ரஜினி, கிடுகிடுவென தனது பழைய உடல் நிலையை அடைந்துவிட்டார். இப்போது பூரண ஆரோக்கியத்துடன் டிஸ்சார்ஜ் ஆகி, தனி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து, தனக்கு தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களை ஆரம்பிக்கப் போவதாக தனுஷ் அறிவித்துள்ளார்.
இன்று அவர் ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், "சூப்பர் ஸ்டார் பூரண நலத்துடன் நேற்று டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். இனி தேசிய விருதுக் கொண்டாட்டங்கள் ஆரம்பம்" என்று குறிப்பிட்டுள்ளார்.