twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி குணமடைந்ததால் விருது கொண்டாட்டங்கள் ஆரம்பம்! - தனுஷ்

    By Shankar
    |

    ரஜினி பூரணமாகக் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்துவிட்டதால், தனக்கு தேசிய விருது பெற்றதற்கான் கொண்டாட்டங்களை இனி ஆரம்பிக்கப்போவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

    ரஜினி உடல்நலக் குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், அவரது மருமகன் தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தது. ஆடுகளம் படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது.

    ஆனாலும், இந்த சந்தோஷத்தை தனுஷ் கொண்டாடவில்லை. தனக்குக் கிடைத்த விருதினை ரஜினிக்கு சமர்ப்பிப்பதாகவும், அவர் நலம் பெற்ற எழுந்துவந்த பிறகே, விருது கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடுவேன் என்றும் தனுஷ் கூறியிருந்தார்.

    சிங்கப்பூரில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ரஜினி, கிடுகிடுவென தனது பழைய உடல் நிலையை அடைந்துவிட்டார். இப்போது பூரண ஆரோக்கியத்துடன் டிஸ்சார்ஜ் ஆகி, தனி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

    இதைத் தொடர்ந்து, தனக்கு தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களை ஆரம்பிக்கப் போவதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

    இன்று அவர் ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், "சூப்பர் ஸ்டார் பூரண நலத்துடன் நேற்று டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். இனி தேசிய விருதுக் கொண்டாட்டங்கள் ஆரம்பம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Danush, son in law of superstar confirmed that Rajini has been discharged from Singapore Hospital. He also announced that he would start the celebrations for getting national award for Aadukalam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X