Don't Miss!
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தேர்தல் பிரசாரங்களில் ரஜினி படத்தைப் பயன்படுத்த ரசிகர்களுக்குத் தடை
தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் யாரையும் ஆதரித்து வாய்ஸ் கொடுப்பதில்லை என ரஜினி ஏற்கெனவே முடிவெடுத்திருந்தாலும், ரஜினிகாந்த் ரசிகர்களும் தாங்கள் யாருக்கு ஓட்டுப்போடுவது என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். குறிப்பாக மீடியாவில் இதுகுறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் ரஜினிகாந்த் ஒப்புதலின் பேரில் தலைமை மன்ற பொறுப்பாளர் சுதாகர் போன் மூலம் தகவல் கொடுத்து உள்ளார்.
அதன் விவரம்:
"தலைவர் ரஜினிகாந்த் தற்போது 'எந்திரன்' படப்பிடிப்பில் முழு ஈடுபாட்டுடன் உள்ளார். அவரது மனம் புண்படாதபடி செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனினும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அவரவர் விருப்பப்படி விரும்பும் கட்சிகளுக்கு வாக்களிக்கலாம். ஆனால் ரஜினியின் படத்தையோ, கொடியையோ யாரும் தேர்தலில் பயன்படுத்தக்கூடாது".
இதனைத் தொடர்ந்து மாவட்ட மன்ற நிர்வாகிகள், ரசிகர்களைக் கூட்டி, ரஜினியின் விருப்பத்துக்கு மாறாக நடந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார்கள்.