Don't Miss!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கர்நாடக கிராமங்கள் தத்தெடுப்பா-ரஜினி மறுப்பு
கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடுமையான மழை வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தின் பாதிப்பு மிக அதிகம். எனவே இங்குள்ள கிராமங்களுக்கு உதவும் நோக்கில் 25 கிராமங்களை ரஜினிகாந்த் தத்தெடுக்கப் போவதாக கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும், கன்னட இயக்குநர் யோகராஜ் பட்டும் தெரிவித்திருந்தனர்.
ஆனால் ரஜினி தரப்பில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ரஜினியின் அலுவலகத்தில் இதுபற்றி தங்களுக்கு தகவல் எதும் இல்லை என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், இன்று ரஜினி ரசிகர் மன்றங்களின் பொறுப்பாளர் சுதாகரிடம் நமது சிறப்புச் செய்தியாளர் தொடர்பு கொண்டு இதுகுறித்துக் கேட்டார். உடனடியாக ரஜினியிடம் பேசிய சுதாகர், ரஜினி சொன்ன பதிலை நம்மிடம் தெரிவித்தார்.
ரஜினி கூறிய பதில்:
'கர்நாடக கிராமங்களைத் தத்தெடுக்கும் யோசனை எதும் இல்லை. இதுபற்றி நான் யாரிடமும் எதுவும் பேசவுமில்லை. அது தவறான தகவல்', என்றார்.