Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கர்நாடக கிராமங்கள் தத்தெடுப்பா-ரஜினி மறுப்பு
கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடுமையான மழை வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தின் பாதிப்பு மிக அதிகம். எனவே இங்குள்ள கிராமங்களுக்கு உதவும் நோக்கில் 25 கிராமங்களை ரஜினிகாந்த் தத்தெடுக்கப் போவதாக கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும், கன்னட இயக்குநர் யோகராஜ் பட்டும் தெரிவித்திருந்தனர்.
ஆனால் ரஜினி தரப்பில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ரஜினியின் அலுவலகத்தில் இதுபற்றி தங்களுக்கு தகவல் எதும் இல்லை என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், இன்று ரஜினி ரசிகர் மன்றங்களின் பொறுப்பாளர் சுதாகரிடம் நமது சிறப்புச் செய்தியாளர் தொடர்பு கொண்டு இதுகுறித்துக் கேட்டார். உடனடியாக ரஜினியிடம் பேசிய சுதாகர், ரஜினி சொன்ன பதிலை நம்மிடம் தெரிவித்தார்.
ரஜினி கூறிய பதில்:
'கர்நாடக கிராமங்களைத் தத்தெடுக்கும் யோசனை எதும் இல்லை. இதுபற்றி நான் யாரிடமும் எதுவும் பேசவுமில்லை. அது தவறான தகவல்', என்றார்.