Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஒத்துழைத்த மீரா!-புகழும் பரத்!!
பரத், மீரா ஜாஸ்மின் நடித்து வெளியாகியுள்ள நேபாளி படத்தில் மீரா ஜாஸ்மின் இதுவரை இல்லாத அளவுக்கு படு நெருக்கமாக பல காட்சிகளில் நடித்துள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மீரா ஜாஸ்மினுடன் நெருங்கி நடித்தது, நேபாளி படத்தில் நடித்த அனுபவம் உள்ளிட்டவற்றை பரத் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
மீரா ஜாஸ்மினுடன் நெருக்கமாக நடித்தது குறித்து அவர் கூறுகையில், மீரா ஜாஸ்மின் சிறந்த நடிகை. முதலில் அவர் படுக்கை அறைக் காட்சிகள், பாத்ரூம் காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை, தயங்கினார். ஆனால் இயக்குநர் விளக்கிச் சொன்ன பிறகு நடிக்க ஒப்புக் கொண்டார்.
மிகச் சிறப்பாக எங்களுடன் ஒத்துழைத்து அந்தக் காட்சிகளில் நடித்துக் கொடுத்தார். முழு ஈடுபாடு காட்டி அவர் நடிக்க வைத்தது பிரமிக்க வைத்தது. நிச்சயம் அவர் ஒரு அற்புதமான நடிகை.
காதல் படத்திலிருந்து எனக்கு இதுவரை ஜோடியாக நடித்தவர்கள் முக்கால்வாசிப் பேர் மலையாளி நடிகைகள்தான். இப்படித்தான் அமைய வேண்டும் என நான் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. எனது ஜோடி யார் என்பதையும் நான் தேர்வு செய்வதில்லை. எல்லாம் இயக்குநர்களின் விருப்பம்தான்.
நான் சம்பளத்தில் குறியாக இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. எனது தயாரிப்பாளர்கள்தான் எனது சம்பளத்தை நிர்ணயம் செய்கிறார்கள். சிலர் உயர்த்துகின்றனர், சிலர் குறைக்கின்றனர். எனது படம் ஏதாவது சிறப்பாக ஓடி விட்டால் என்னைக் கூட கேட்காமல் எனது சம்பளத்தைக் கூட்டி விடுகின்றனர்.
இதுவரை காதல் படங்களில் அதிகம் நடித்து வந்தேன். இப்போது ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறேன். அதுதான் ஒரு நடிகருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தித் தரும் என்றார் பரத்.
தற்போது பரத் கையில் 6 படங்கள் இருக்கிறதாம். முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு, ஆறுமுகம், திருத்தணி, சேவல் ஆகியவை அவற்றில் சில.
வருடத்திற்கு 3 படங்கள் கொடுக்க திட்டமிட்டு அதன்படி நடித்து வருகிறாராம் பரத்.