Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
காந்தஹார் படத்திலிருந்து சூர்யா விலகல்
இந்தப் படத்தில் மோகன்லாலின் கீழ் பணியாற்றும் அதிரடிப் படை கமாண்டோ வேடத்தில் நடிப்பதாக ஒப்புக் கொண்டிருந்தாராம் சூர்யா.
ஆனால் சமீபத்தில் மோகன்லாலைச் சந்தித்த சூர்யா, தனது அடுத்தடுத்த படங்கள் மற்றும் கால்ஷீட் பற்றாக்குறை பற்றி அவரிடம் விளக்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, காந்தஹார் படத்திலிருந்து விலகிக் கொண்டதை அறிவித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
காந்தஹார் விமானக் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் இந்த காந்தஹார். தமிழில் அரண் என்ற படத்தை எடுத்த மேஜர் ரவிதான் இதன் இயக்குநர்.
படத்தின் கதை மற்றும் ஆக்ஷன் காட்சிகளை ரவி விவரித்ததைப் பார்த்து ஈர்க்கப்பட்ட சூர்யா தானாக முன்வந்து இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். இப்போது அவர் ஏன் விலகினார் என்பதற்கு சரியான காரணம் தெரியாத நிலையில், புதிய இளம் ஹீரோ ஒருவரைத் தேடி வருகிறாராம் மோகன்லால்.
சூர்யா கைவசம், சிங்கம், முருகதாஸ் படம் மற்றும் ராம்கோபால் வர்மாவின் ரக்தசரித்ரா போன்ற படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.