twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பட்டாசு வேண்டாம்.. தொண்டர்களிடம் சிரஞ்சீவி

    |

    Chiranjeevi
    ஆந்திராவில் சமீபத்தில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. கர்னூன், மெகபூப் நகர், விஜயவாடா, பிரகாசம் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் அங்கு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பவில்லை.

    இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவரும் நடிகருமான சிரஞ்சீவி,

    ஆந்திராவில் வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆகாகியுள்ளனர்.

    இதனால் பிரஜா ராஜ்ஜியம் கட்சி தொண்டர்களும் எனது ரசிகர்களும் இந்த தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ஒரு புறம் மக்கள் பேரழிவால் கஷ்டப்படும் போது நாம் மட்டும் தீபாவளியை எப்படி மகிழ்ச்சியாக கொண்டாட முடியும்?.

    தொண்டர்களும் ரசிகர்களும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி தீபாவளியை கொண்டாடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X