Don't Miss!
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மனைவியை துன்புறுத்தியதாக இன்னொரு கன்னட நடிகர் மீது புகார்
ஒரு மாதத்திற்கு முன்புதான் கன்னட நடிகர் தர்ஷனுக்கும், அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது தனது மனைவியை அடித்துக் காயப்படுத்தியதாக தர்ஷன் மீது விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார். மேலும் நடிகை நிகிதாவுக்கும், தர்ஷனுக்கும் இடையே இருந்த நட்பு காரணமாகவே இந்த மோதல் மூண்டதாகவும் கூறப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட தர்ஷன் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் இன்னொரு கன்னட நடிகரான பிரஷாந்த் என்பவர் சிக்கலில் மாட்டியுள்ளார். இவர் தன்னை அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் அவரது மனைவி சசிரேகா மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஆண்டுதான் இக்குழந்தை பிறந்தது.
ஒரட்டா ஐ லவ் யூ உள்ளிட் சில படங்களில் நடித்துள்ளார் பிரஷாந்த். இவர் அவ்வளவு பிரபலமில்லாத நடிகர் ஆவார். படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால் அதில் நஷ்டமே ஏற்பட்டது. இதனால் மனைவியிடம் ரூ. 10லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் கன்னடப் படவுலகம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.