Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற 6 அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சஞ்சய்தத் மீது மான்யதா கணவர் வழக்கு!
சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத்தும், அவர் 2 வருடங்களாக காதலித்து வந்த மான்யதாவும் திருமணம் செய்து கொண்டனர். மான்யதா முஸ்லீம் பெண். இருப்பினும் இந்தக் கல்யாணம் இந்து முறைப்படி நடந்தது.
சஞ்சய் தத்துக்கு இது 3வது திருமணம். மான்யதா ஏற்கனவே திருமணமாகி முதல் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருபவர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந் நிலையில் மான்யதாவை தான் இன்னும் முறைப்படி விவாகரத்து செய்யவில்லை. அந்த நிலையில் அவரை சஞ்சய் தத் எப்படிக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் மான்யதாவின் முதல் கணவரான மெஹ்ராஜ் ஷேக்.
இதுதொடர்பாக மும்பையில் உள்ள பந்த்ரா பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஷேக் தாக்கல் செய்துள்ள மனுவில், நானும் மான்யதாவும் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி திருமணம் செய்து கொண்டோம். எங்களது திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்தது.
அதன் பின்னர் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இஸ்லாமிய முறைப்படி எங்களில் யாரும் இதுவரை தலாக் செய்து கொள்ளவில்லை. எனவே இன்னும் எங்களது திருமணம் முறியவில்லை.
இந்த நிலையில் மான்யதாவை சஞ்சய் தத் திருமணம் செய்து கொண்டது செல்லாது. அவர்கள் இஸ்லாமிய சட்டத்தை மீறி நடந்து கொண்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.