twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதுக்கோட்டையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த ஈஸ்வர்

    By Sudha
    |

    Eshwar and Dhiyana
    'விருந்தாளி' படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு கிடைத்த புது முகம் ஈஸ்வர். இவர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். எம்.பி.ஏ. பட்டதாரி. படிப்பை முடித்து விட்டு எமிரேட்ஸ் விமான இலாகாவில் பணிபுரிந்து வந்தார். மாடலிங் துறையின் மீது கொண்ட ஈர்ப்பால் பணியை தூக்கி எறிந்துவிட்டு மாடலிங் செய்து வந்தார்.

    மாடலிங் செய்ய வந்த இவர் மீது தமிழ் திரையுலகின் கண்கள் பட்டது. இதையடுத்து இவர் 'விருந்தாளி' படத்தின் நாயகன் ஆனார். முதல் படத்திலேயே கிருதா மீசையுடன் முரட்டுத்தனமான கெட் அப்பில் வந்து கலக்கி உள்ளார்.

    இவரின் அடுத்த படம் 'டாம் ட்ரிபிள் நைன்' என்னும் ஆங்கில படம். இதற்கிடையே இவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளதாம். தனது ஆங்கிலப் படத்தை முடித்துவிட்டு மற்ற படங்களில் நிச்சயமாக நடிக்கப் போவதாக கூறியுள்ளார்.

    திரை உலகப் பயணத்தின் முதல் அடியை கோலிவுட்டிலும், அடுத்த அடியை ஹாலிவுட்டிலும் வைத்துள்ளார்.

    ஒரே நேரத்தில் இரண்டு அடி எடுத்து வைப்பதில் தவறில்லை, பலத்த அடி விழாமல் பார்த்துக் கொண்டால் நல்லது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X