twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிக்கு மருத்துவ பரிசோதனை... பூரண குணம் அடைந்ததாக மருத்துவர்கள் அறிவிப்பு!

    By Shankar
    |

    Rajinikanth
    சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து வந்துள்ள ரஜினியை, முதல் முறையாக மருத்துவர்கள் குழு மீண்டும் பரிசோதித்துப் பார்த்தது. ரஜினி மிகவும் நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    ரஜினிக்கு கடந்த ஏப்ரல் 29-ந் தேதி 'ராணா' படப்பிடிப்பில் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இசபெல்லா மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    சிறுநீரக பாதிப்பு இருந்ததால் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். அங்குள்ள ஆஸ்பத்திரியில் ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பூரண குணமடைந்து கடந்த மாதம் 13-ந் தேதி சென்னை திரும்பினார்.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீடு மற்றும் கேளம்பாக்கம் பண்ணை இல்லத்தில் தங்கி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இதுவரை யாரையும் அவர் சந்திக்கவில்லை.

    இதற்கிடையில் ரஜினி உடல் நிலையை மீண்டும் பரிசேதித்தனர் மருத்துவர்கள். டாக்டர்கள் ரஜினி வீட்டுக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்தனர். அவர் பூரண நலமடைந்து ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

    அக்டோபர் மாதம் ராணா படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக அடுத்த மாதம் இறுதியில் இன்னொரு முறை ரஜினி உடல் பரிசோதனை செய்து கொள்வார் என கூறப்படுகிறது.

    English summary
    A team of specialist doctors visit Rajinikanth and checked his health condition. After the regular check ups they expressed their satisfaction on the way of his recovery.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X