Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினிக்கு மருத்துவ பரிசோதனை... பூரண குணம் அடைந்ததாக மருத்துவர்கள் அறிவிப்பு!
ரஜினிக்கு கடந்த ஏப்ரல் 29-ந் தேதி 'ராணா' படப்பிடிப்பில் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இசபெல்லா மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
சிறுநீரக பாதிப்பு இருந்ததால் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். அங்குள்ள ஆஸ்பத்திரியில் ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பூரண குணமடைந்து கடந்த மாதம் 13-ந் தேதி சென்னை திரும்பினார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீடு மற்றும் கேளம்பாக்கம் பண்ணை இல்லத்தில் தங்கி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இதுவரை யாரையும் அவர் சந்திக்கவில்லை.
இதற்கிடையில் ரஜினி உடல் நிலையை மீண்டும் பரிசேதித்தனர் மருத்துவர்கள். டாக்டர்கள் ரஜினி வீட்டுக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்தனர். அவர் பூரண நலமடைந்து ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் மாதம் ராணா படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக அடுத்த மாதம் இறுதியில் இன்னொரு முறை ரஜினி உடல் பரிசோதனை செய்து கொள்வார் என கூறப்படுகிறது.