Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்
சென்னை பிலிம்சேம்பரில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் கலைப்புலி ஜி.சேகரன் பேசியதாவது:
ஒரு படம் வெற்றிபெற்றால் அதன் பலன் தயாரிப்பாளரை விட அந்த படத்தின் கதாநாயகன், டைரக்டர் ஆகிய இருவருக்குத்தான் அதிகமாக கிடைக்கிறது. படம் தோல்வி அடைந்தால் அதன் பாதிப்பு தயாரிப்பாளர் ஒருவரையே சேருகிறது. திரைப்படத் தொழிலில் இன்றுள்ள சிக்கல் இதுதான்.
கதாநாயகர்கள் எந்தச் சூழலிலும் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் படத்தில் பணிபுரிகிற உதவி டைரக்டர்கள், ஒளிப்பதிவு உதவியாளர்கள் போன்றவர்கள்தான் வறுமையில் வாடுகிறார்கள்.
சமீபத்தில், கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட ஒரு படம் திரைக்கு வந்தது. படம் சரியாகப் போகவில்லை. அந்த படத்தின் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்தார்கள். ஆனால் அந்த படத்தின் கதாநாயகன் ரூ.3 கோடி சம்பளம் கேட்பதாகச் சொல்கிறார்கள்.
படம் வெற்றி பெற்றால் சம்பளத்தை உயர்த்துகிற கதாநாயகர்கள், படம் தோல்வி அடைந்தால் சம்பளத்தை ஏன் குறைப்பதில்லை, இது என்ன நியாயம்?. ஒரு கதாநாயகனுக்கு ஒரு படம் வெற்றிபெற்றால், உடனே ரூ.1 கோடி சம்பளத்தை உயர்த்துகிறார்கள். அதேபோல் தோல்வி அடைந்தால் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்.
இன்னொன்று, தயாரிப்பாளர்களைக் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு வந்ததும் கண்டுகொள்வதே இல்லை.
ஒரு படம் தயாரிக்கும்போது தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் நாயகனுக்கும் தகராறு வருவது சகஜம். கதாநாயகன் பெரிய ஆளானாலும் கூட, இந்த தகராறை மனதில் வைத்துக் கொண்டு தயாரிப்பாளருக்கு உதவ மறுப்பதுடன், கவிழ்க்கவும் பார்க்கிறார்கள். கதாநாயகர்கள் அனுசரித்துப் போனால் தான் தயாரிப்பாளர்களின் கஷ்டங்கள் குறையும்.
ரூ.5 கோடி சம்பளம் வாங்குகிற கதாநாயகன், படம் ரிலீசின்போது அதில் பாதி சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொள்ள வேண்டும். படம் ரிலீசாகி வெற்றிபெற்றால் மீதிப் பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்றார் சேகரன்.