Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'குசேலரு' ஷூட்டிங் தொடக்கம்
மலையாளத்தில் வெளியான கத பறயும் போள் படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. தமிழில் குசேலன் என்ற பெயரிலும், தெலுங்கில் குசேலரு என்ற பெயரிலும் இப்படத்தை இயக்கவுள்ளார் பி.வாசு.
ரஜினிகாந்த், பசுபதி, நயனதாரா, மீனா, வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ்ப் படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த நிலையில் தெலுங்குப் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் நடந்தது.
இந்த விழாவில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மெகா ஸ்டார் சிரஞ்சீவி, டாக்டர் ராஜசேகர், வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்னர்.
சிரஞ்சீவி கிளாப் அடித்து படப்பிடிப்பை முறைப்படி தொடங்கி வைத்தார்.
தெலுங்குப் பதிப்பை வைஜெயந்தி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த விழாவில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ரஜினியின் நண்பருமான சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் தாசரி நாராயண ராவ், நடிகர் மோகன்பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவில கலந்து கொண்ட சிரஞ்சீவி, சந்திரபாபு நாயுடு, தாசரி நாராயண ராவ் உள்ளிட்டோர் ரஜினிக்கும் தங்களுக்கும் உள்ள நட்பு குறித்த சுவாரஸ்ய தகவல்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர்.
இறுதியாக ரஜினி அனைவரும் நன்றி தெரிவித்துப் பேசினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு டோலிவுட்டுக்குத் திரும்பி வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தெலுங்கு குசேலன் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஜெகபதி பாபு, நன்றி நவின்றார். பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர் ராமாநாயுடு, அல்லு அரவிந்த், தனிகல பரணி மற்றும் தெலுங்குத் திரையுலகினர் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.