ஸ்னேகாவுடன் காதலா..?-பிரசன்னா

ஸ்னேகாவும், பிரசன்னாவும் முதன்முதலாக, 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இன்றுதான் படம் ரிலீஸாகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அமெரிக்காவிலேயே நடந்தது. படப்பிடிப்பின் போது ஸ்னேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் எங்கும் சேர்ந்தே செல்வதாகவும் கூறப்பட்டது.
படத்திலும் இருவருக்கும் முத்தக்காட்சிகள் உள்பட மிக நெருக்கமான காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. வெகு இயல்பாக அந்தக் காட்சிகளில் தோன்றியிருந்தனர் இருவரும். கெமிஸ்ட்ரி எக்கச்சக்கமாக ஒர்க் அவுட் ஆகிவிட்டதென கோலிவுட் முழுக்க கிசுகிசுக்கப்பட்டது.
நேற்று பத்திரிகையாளர்களைச் சந்திக்க வந்திருந்த பிரசன்னாவிடமே இதுகுறித்து கேட்டுவிட்டனர் நிருபர்கள்.
அதற்கு பிரசன்னா அளித்த பதில்:
காதல் காட்சி இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நானும், ஸ்னேகாவும் நெருக்கமாகப் பழகினோம். இயக்குநர் எப்படி நடிக்கச் சொன்னாரோ, அதைத்தான் இரண்டு பேரும் செய்தோம். சேர்ந்தே ஷாப்பிங் போனோம். பெரும்பாலும் இருவரும் ஒன்றாக இருந்தோம். நல்ல இணக்கமான புரிதல் வேண்டும் என்பதால் அப்படி பழகினோம். முத்தம் கொடுத்தது கூட இந்த மாதிரி ஒரு சூழலில்தான். ஆனால் அது காதல் இல்லை.
அந்த படத்தில் ஸ்னேகா இல்லாமல், வேறு ஒரு கதாநாயகி நடித்திருந்தாலும் இந்த நெருக்கம் இருந்திருக்கும்.
நானும், ஸ்னேகாவும் நல்ல நண்பர்கள். இந்த விஷயத்தை அவர் எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறார்? என்று தெரியவில்லை. இதுபற்றி அவரிடம் நான் எப்படி பேசப் போகிறேனோ என்றும் தெரியவில்லை.
எங்கள் நட்பில் விரிசல் வரக்கூடாது என்று நினைக்கிறேன். ஸ்னேகாவுக்கும், எனக்குமான நட்பு தொடர வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன், என்றார்.
ஸ்னேகாவும் கிட்டத்தட்ட இதே பதிலைத்தான் சொல்லியிருந்தார்.
ஒத்திகை இன்னும் தொடர்கிறது போல!


Click it and Unblock the Notifications











