twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ''எல்லாரு சென்னாகிதீரா..?''-பெங்களூரில் அசத்திய விஜய்!

    By Siva
    |

    Vijay
    வேலாயுதம் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெங்களூர் சென்ற இளைய தளபதி விஜய் கன்னடத்தில் பேசி அசத்தியுள்ளார்.

    விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள வேலாயுதம் வரும் 26-ம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள பூர்ணிமா திரையரங்கில் நடந்தது. இதில் கலந்து கொண்ட விஜய்க்கு அவரது ரசிகர்கள் பட்டாசு வெடிதது, விசில் பறக்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    திரையரங்கமே அதிரும்படி கரகோஷம் எழுப்பினர். இதைப் பார்த்து விஜய் நெகிழ்ந்து போனார்.

    மேடையில் பேசிய விஜய் கூறியதாவது,

    எல்லாரு சென்னாகிதீரா? (எல்லாரும் நல்லா இருக்கிறீர்களா) என்று கன்னடத்தில் நலம் விசாரிக்க ரசிகர்களுக்கு ஒரே குஷியாகிவிட்டது. பெங்களூர் வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தமிழகத்தைப் போன்ற வரவேற்பு இங்கும் உள்ளது. இங்குள்ள ரசிகர்கள் எனக்கு எப்பொழுதுமே பேராதரவு அளித்து வருகின்றனர்.

    எனது நண்பர் சிவராஜ் குமாரின் 100வது படமான ஜோகையா அறிமுக விழாவுக்கு வந்திருந்தபோது கூட எனக்கு உற்சாக வரவேற்பளித்தீர்கள். நீங்கள் என் படங்கள் எத்தனையோ பார்த்திருப்பீர்கள். ஆனால் வேலாயுதம் அவற்றைவிட வித்தியாசமானது என்றார்.

    விஜய் பேசப், பேச ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். விஜய் வருகையால் பூர்ணிமா திரையரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது.

    English summary
    Ilayathalapathy Vijay's entry to Bengaluru was no less than a festival for his fans out there. They welcomed the actor, who visited the capital city of Karnataka for the promotion of his forthcoming movie Velayudham, by bursting crackers and chanting his name at Poornima theatre.The Kaavalan star was given a feel of Tamil Nadu in Bengaluru. Moved by their affection and love, Vijay started off his words by speaking Kannada and said, “Ellaru chennagidira? (Are you all fine?).”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X