Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
சம்பந்தமே இல்லாமல் என்மீது புகாரா? - நடிகர் ஆர்கே மறுப்பு
சென்னை: வேலைக்கு தேர்வு செய்த நபரை விட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாமல் என்மீது சில இளைஞர்கள் புகார் செய்துள்ளனர், என்று நடிகர் ஆர்கே தெரிவித்தார்.
'எல்லாம் அவன் செயல்', 'அவன் இவன்' போன்ற படங்களில் நடித்தவர் ஆர்.கே. பி வாசு இயக்கத்தில் இவர் நடித்துள்ள, 'புலி வேசம்' என்ற படம் விரைவில் வெளிவர உள்ளது. அதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளார்.
இந்த நிலையில் இவர்மீது நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் சில இளைஞர்கள் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
சென்னை தியாகராயநகரில் 'இன்டர்நேஷனல் பிஸ்னஸ் டெவலப்மெண்ட் கார்ப்ரேஷன்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் உள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் ஆர்.கே.வும், தலைமை நிர்வாக அதிகாரியாக விஜயகுமார் என்பவரும் செயல்பட்டதாகவும் கூறிய அவர்கள், அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தற்கான சம்பளத்தை தரவில்லை என்றும் கூறினர்.
இந்த மனு மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆர்.கே. மறுப்பு
இந்த புகார் தொடர்பாக நடிகர் ஆர்.கே.விடம், நிருபர்கள் கேட்டபோது, அந்த புகார் தவறானது என்றும், அவர்களை வேலைக்கு எடுத்தது விஜயகுமார் என்றும், அவர்தான் அதற்கு பொறுப்பாளி என்றும், தனக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்தார்.
"யார் பெயரை சொன்னால் உடனடி கவனம் பெறுமோ அவர் பெயரை பிரயோகப்படுத்தும் டெக்னிக் இது. போலீசார் தாராளமாக விசாரிக்கலாம். எந்த வகையில் இதில் சம்பந்தப்படாத என்பெயரை எதற்காக இழுக்க வேண்டும்?", என்றார் அவர்.