Don't Miss!
- News நான் ஆர்மி ஆபிசர் சார்..வீடு வாடகைக்கு விடுபவர்களே உஷார்! புது டெக்னிக்கில் ஆட்டைய போடும் கும்பல்!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Finance Adani: விதிமுறைகளை மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குசேலனால் நஷ்டம்-ரூ.10 கோடி திருப்பி தரும் ரஜினி?
குசேலன் திரைப்படத்தை ரஜினியின் குருநாதர் பாலச்சந்தரும், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமாரும் தமிழில் தயாரித்திருந்தனர். இதன் தெலுங்குப் பதிப்பை விஜயகுமாரும் அஸ்வினி தத்தும் தயாரித்தார்கள்.
தமிழில் நடித்ததற்காக பாலச்சந்தரிடம் சம்பளம் வாங்கிக் கொள்ளாத ரஜினிகாந்த், தெலுங்குப் பதிப்புக்கு மட்டும் சம்பளம் பெற்றுக் கொண்டார். தமிழில் அந்தப் பணம் முழுமையாக பாலச்சந்தருக்கே சேரட்டும் என்றும் பெரிய அளவில் லாபம் வரும்பட்சத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறிவிட்டாராம்.
படத்தை ரூ.65 கோடிக்கு பிரமிட் சாய்மீரா நிறுவனம் வாங்கி வெளியிட்டது. வழக்கமான ரஜினி படமாக குசேலன் இல்லாததால், நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்களின் ஆதரவைப் பெறமுடியவில்லை குசேலனால்.
ஒகேனக்கல் விவகாரத்தில் தன்னுடைய பேச்சுக்கு கன்னடர்களிடம் ரஜினி வருத்தம் தெரிவித்த பிரச்சினையும் பூதாகரமாகி படத்தின் வசூலைப் பாதித்தது.
பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் பிரமிட் சாய்மிரா நிறுவனத்திடம், தங்கள் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் திரும்பிய ரஜினி படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், ரூ.10 கோடியை திருப்பித் தருவதாக பிரமிட் சாய்மிராவுக்கு குசேலன் தயாரிப்பாளர்கள் சார்பில் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சாய்மிரா நிறுவனத் தலைவர் சாமிநாதன் அளித்துள்ள பேட்டியில், குசேலன் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.21 கோடி வசூலித்துள்ளதாகவும், வரும் நாட்களில் போட்ட பணம் திரும்பக் கிடைத்துவிடும் என்றும் கூறியுள்ளார். விரைவில் குசேலன் வசூல் குறித்து முழு விபரங்களையும் வெளியிடவிருப்பதாகவும் பிரமிட் சாய்மிரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாபா பாணியில்...
ஏற்கெனவே பாபா திரைப்படத்துக்கு வசூல் பாதித்தபோது, படத்தின் தயாரிப்பாளரான ரஜினி விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும், மறைந்த ஜீவி முன்னிலையில் நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடுகட்டும் வகையில் பணத்தை திருப்பித் தந்தது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு முன் இயக்குநர் மணிரத்னமும், தனது இருவர் பட நஷ்டத்தை இதே பாணியில்தான் ஈடுகட்டினார்.