Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பிறந்த நாள்-விக்ரம் கண்தானம்
விக்ரமுக்கு நேற்று 42வது பிறந்தநாளாகும். இதையொட்டி அர்த்தபூர்வமாக தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் விக்ரம்.
தனது பிறந்த நாளையொட்டி கண்தானம் செய்தார் விக்ரம். இதுதொடர்பான ஆவணங்களை அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிடம் அளித்தார். மேலும், விக்ரம் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 1332 பேரும் கண்தானம் செய்தனர்.
இதுதவிர தனது பெயரில் புதிய இணையதளம் ஒன்றையும் நேற்று தொடங்கினார் விக்ரம்.
இந்த இணையதளம் குறித்து விக்ரம் கூறுகையில், எனது ரசிகர்கள் பாராட்டுக்குரியவர்கள். நான் ஆண்டுக்கு 3 படங்கள் தந்தாலும், 3 ஆண்டுகளுக்கு ஒரு படம் தந்தாலும் காத்திருந்து, அதை ரசிக்க தயாராக இருப்பவர்கள் அவர்கள்.
இப்படிப்பட்ட பெருந்தன்மையான, விசுவாசம் மிக்க ரசிகர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும். எனக்கு அவர்கள் தருவதை அவர்களுக்கு நான் முறையாக திருப்பித் தர வேண்டும். அதற்குத்தான் இந்த இணையதளம்.
தாங்கள் நினைக்கும் விஷயங்களை இந்த இணையதளம் மூலம் அவர்கள் என்னிடம் தெரிவிக்கலாம். தங்களது யோசனைகளை இதன் மூலம் தெரிவிக்கலாம் என்றார் விக்ரம்.
மேலும், தனது விக்ரம் பவுன்டேஷன் நிறுவனம், வரும் ஆண்டுகளில் மக்களுக்கு உபயோகரமான பணிகளில் ஈடுபடவுள்ளதாவும் தெரிவித்தார் விக்ரம்.