நடிகர் சங்கம்: சரத்-ராதாரவி மீண்டும் போட்டி

நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வரும் ஜூலை 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
ஆரம்பத்தில் இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், மாநில அரசியலில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறிவந்தார் சரத் குமார்.
ஆனால் தனது முடிவை அவர் மாற்றிக் கொண்ட அவர் இன்று மனு தாக்கல் செய்தார். அதே போல ராதா ரவி மீண்டும் பொதுச் செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.
துணைத் தலைவர் பதவிக்கு விஜய்குமார், மனோரமா ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு சந்திரசேகரும் மனு தாக்கல் செய்தனர்.
கமிட்டி உறுப்பினர் பதவிக்கு சத்யராஜ், மும்தாஜ், எஸ்.வி.சேகர், குயிலி, சத்யபிரியா, மயில்சாமி, சிஐடி சகுந்தலா, சின்னி ஜெயந்த் ஆகியோர் மனு செய்தனர்.
நடிகர் சங்கத்தில் மொத்தம் 3200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 2,636 பேருக்கு ஓட்டுரிமை உண்டு.
தலைவர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் சரத், ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











