Don't Miss!
- News கடும் வெயில்.. வெப்ப அலை.. வாக்களிக்க போகிறீர்களா? அதிகாரிகள் சொன்ன முக்கிய அறிவுரை!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கவிஞரும் நடிகருமான பா விஜய் வீடடில் கொள்ளை முயற்சி!
கவிஞரும் நடிகருமான பா விஜய் வீட்டில் திருட முயன்ற இரு இளைஞர்கள், பா விஜய் மனைவி சத்தம் போட்டதால் தப்பி ஓடினர்.
சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் பா.விஜய். ஞாபகங்கள், சமீபத்தில் வந்த இளைஞன் படங்களின் நாயகனாக நடித்துள்ளார். இவரது வீடு, வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் பா.விஜய் வெளியூர் சென்று விட்டார்.
அவருடைய மனைவியும், மகளும் மட்டும் வீட்டில் இருந்தனர். பொங்கல் பண்டிகை என்பதால் காவலாளி சொந்த ஊருக்கு சென்று விட்டார். நள்ளிரவில் வீட்டில் ஏதோ பொருட்கள் உருண்ட சத்தம் கேட்டது. இதைக் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த விஜய்யின் மனைவி எழுந்து சென்று பார்த்தார்.
அப்போது அவரது அறையின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அந்த நேரத்தில் 2 வாலிபர்கள் பா விஜய் வீ்ட்டு காம்ப்பவுண்ட் சுவரை எகிறி குதித்து தப்பியோடியதை பார்த்தனர். அவர்கள் கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டில் உள்ள அறைகளின் கதவுகள் அனைத்தும் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தன.
வீட்டின் அறைகள் அனைத்தையும் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு திருட கொள்ளையர்கள் திட்டமிட்டது தெரியவந்தது. ஆனால், பா.விஜய்யின் மனைவி கண் விழித்து சத்தம் போட்டதால், கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வளசரவாக்கம் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!