Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கவிஞரும் நடிகருமான பா விஜய் வீடடில் கொள்ளை முயற்சி!
கவிஞரும் நடிகருமான பா விஜய் வீட்டில் திருட முயன்ற இரு இளைஞர்கள், பா விஜய் மனைவி சத்தம் போட்டதால் தப்பி ஓடினர்.
சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் பா.விஜய். ஞாபகங்கள், சமீபத்தில் வந்த இளைஞன் படங்களின் நாயகனாக நடித்துள்ளார். இவரது வீடு, வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் பா.விஜய் வெளியூர் சென்று விட்டார்.
அவருடைய மனைவியும், மகளும் மட்டும் வீட்டில் இருந்தனர். பொங்கல் பண்டிகை என்பதால் காவலாளி சொந்த ஊருக்கு சென்று விட்டார். நள்ளிரவில் வீட்டில் ஏதோ பொருட்கள் உருண்ட சத்தம் கேட்டது. இதைக் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த விஜய்யின் மனைவி எழுந்து சென்று பார்த்தார்.
அப்போது அவரது அறையின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அந்த நேரத்தில் 2 வாலிபர்கள் பா விஜய் வீ்ட்டு காம்ப்பவுண்ட் சுவரை எகிறி குதித்து தப்பியோடியதை பார்த்தனர். அவர்கள் கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டில் உள்ள அறைகளின் கதவுகள் அனைத்தும் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தன.
வீட்டின் அறைகள் அனைத்தையும் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு திருட கொள்ளையர்கள் திட்டமிட்டது தெரியவந்தது. ஆனால், பா.விஜய்யின் மனைவி கண் விழித்து சத்தம் போட்டதால், கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வளசரவாக்கம் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.