Don't Miss!
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற விஜய், அஜீத்!
இதுவரை முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளென்றாலே அலறியடித்துக் கொண்டு ஓடிய திரையுலகப் பிரபலங்கள் இப்போது அவர் காலில் விழுந்து ஆசி பெறும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.
தென் சென்னை மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் சைதை துரைசாமி மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் சூப்பர் ஸ்டார்களான அஜீத் மற்றும் விஜய்யை ஜெயலலிதா வாழ்த்தினார்.
துரைசாமி மகன் வெற்றி துரைசாமிக்கும், திருப்பூரை சேர்ந்த செல்வராஜ்-மல்லிகா தம்பதியினரின் மகள் வசுந்தராவுக்கும் கடந்த 12-ந் தேதி கரூரில் திருமணம் நடந்தது.
அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் ஜெயலலிதா நேரில் கலந்து கொண்டார். இதற்காக கொடநாட்டிலிருந்து அவர் சென்னை வந்திருந்தார்.
அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது மனைவியுடனும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், பாஜக தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் வந்திருந்தார். அதேபோல விஜய்யும் வந்திருந்தார். ஜெயலலிதாவைப் பார்த்த அஜீத் தனது மனைவியுடன் சென்று ஜெயலலிதாவை வணங்கி காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் சிறிது நேரம் இருவரும் ஜெயலலிதாவுடன் பேசினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிளம்பிய ஜெயலலிதா காரில் ஏறிய பிறகுதான் விஜய்யைப் பார்த்தார். உடனடியாக அவரை அருகில் அழைத்து நலமா என்று விசாரித்தார். பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டுக் கிளம்பினார்.