Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற விஜய், அஜீத்!
இதுவரை முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளென்றாலே அலறியடித்துக் கொண்டு ஓடிய திரையுலகப் பிரபலங்கள் இப்போது அவர் காலில் விழுந்து ஆசி பெறும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.
தென் சென்னை மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் சைதை துரைசாமி மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் சூப்பர் ஸ்டார்களான அஜீத் மற்றும் விஜய்யை ஜெயலலிதா வாழ்த்தினார்.
துரைசாமி மகன் வெற்றி துரைசாமிக்கும், திருப்பூரை சேர்ந்த செல்வராஜ்-மல்லிகா தம்பதியினரின் மகள் வசுந்தராவுக்கும் கடந்த 12-ந் தேதி கரூரில் திருமணம் நடந்தது.
அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் ஜெயலலிதா நேரில் கலந்து கொண்டார். இதற்காக கொடநாட்டிலிருந்து அவர் சென்னை வந்திருந்தார்.
அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது மனைவியுடனும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், பாஜக தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் வந்திருந்தார். அதேபோல விஜய்யும் வந்திருந்தார். ஜெயலலிதாவைப் பார்த்த அஜீத் தனது மனைவியுடன் சென்று ஜெயலலிதாவை வணங்கி காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் சிறிது நேரம் இருவரும் ஜெயலலிதாவுடன் பேசினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிளம்பிய ஜெயலலிதா காரில் ஏறிய பிறகுதான் விஜய்யைப் பார்த்தார். உடனடியாக அவரை அருகில் அழைத்து நலமா என்று விசாரித்தார். பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டுக் கிளம்பினார்.