போதையில் மயங்கிக் கிடக்கும் தமிழ் இளைஞர் சமுதாயம்- நடிகர் ராஜேஷ் வேதனை

By Shankar

Actor Rajesh
மதுரை: தமிழ் இளைஞர்கள் போதையில் மயங்கிக் கிடக்கிறார்களே என்று வேதனையுடன் குறிப்பிட்டார் நடிகர் ராஜேஷ்.

மதுரையில் இளைஞர்கள் பற்றிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராஜேஷ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், "மதங்கள் என்ற அஸ்திவாரத்தில் கட்டப்பட்டுள்ள இன்றை குடும்ப சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. திரைப்படம், அரசியல், பொது வாழ்வு போன்றவற்றில் குறிப்பிடும்படியான தலைவர்களான காமராஜர், கக்கன், லால்பகதூர் சாஸ்திரி, அண்ணா, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் இன்று இல்லை.

மாறாக லஞ்சம், ஊழல் நிறைந்த சமுதாயமாக தற்போது மாறியுள்ளது.

தொலைக்காட்சி, திரைப் படங்கள், உலகமயமாக்கல் போன்றவற்றாலும் கலாச்சார சீரழிவு ஏற்பட்டு இன்றைய இளைஞர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவர்கள் பழைய வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மறக்கடிக்கப்பட்டு வருகிறார்கள். கலாச்சார சீரழிவுக்கு காரணமாக மனிதனின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான இளைஞர்கள் தற்போது மதுவுக்கு அடிமையாவது வேதனை அளிக்கிறது. இதனால் இளைஞர்கள் சிந்திக்கும் சக்தியையே இழந்து காணப்படுகிறார்கள். வெறும் பரபரப்பை நம்புகிறார்கள்.

எனவே இதுபோன்ற சவால்களில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மதுவிலிருந்து மீளவேண்டும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X