Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
"அட்வான்ஸை கொடுங்க" - விஷாலுக்கு நெருக்கடி
தமிழில் போக்கிரி படம் எடுத்த ரமேஷ், விஷாலை வைத்து 'தீராத விளையாட்டு பிள்ளை' என்ற புதிய படத்தைத் தயாரிக்க திட்டமிட்டார்.
இதற்காக நடிகர் விஷால், நடிகை ஸ்ரேயா ஆகிய இருவருக்கும் ஒரு பெரிய தொகை 'அட்வான்சாக' கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ரமேஷ் திட்டமிட்டபடி படத்தை தொடங்காமல், காலதாமதம் செய்ததாக விஷால் தரப்பில் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா அந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டார். இதற்காக பட அதிபர் ரமேசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தை தயாரிக்கும் உரிமையை வாங்கினார். அவருடைய தயாரிப்பில், படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விஷால் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், பட அதிபர் ரமேஷ் புகார் செய்துள்ளார்.
அதில், "தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடிப்பதற்காக, விஷாலுக்கு ஒரு பெரிய தொகையை அட்வான்சாக கொடுத்தேன். படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்யும்படி என்னிடம் கூறினார்.
அதன்படி, ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்து, அவருக்கு அட்வான்சாக ஒரு பெரிய தொகையை கொடுத்தேன். படத்தை தயாரிக்கும் உரிமையை விஷாலின் அண்ணன் எடுத்துக்கொண்ட பின், விஷால், ஸ்ரேயா ஆகிய இருவருக்கும் நான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை இதுவரை திருப்பி தரவில்லை.
இது தொடர்பாக நான் பலமுறை விக்ரம் கிருஷ்ணாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். அவரை நேரில் சந்திக்கவும் முடியவில்லை. போனில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
எனவே விஷால், விக்ரம் கிருஷ்ணா ஆகிய இருவரிடம் இருந்தும் எனக்கு சேர வேண்டிய தொகையை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து தொடர்கிறது!