Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினியை தரிசிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு!
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையிலும், பின்னர் சிங்கப்பூரிலுமாக சிகிச்சை பெற்றார் ரஜினிகாந்த். அதன் பின்னர் பூரண குணமடைந்து அவர் ஜூலை 13ம் தேதி இரவு சென்னை திரும்பினார்.
மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு பரபரப்புக்கு மத்தியிலும், சென்னை விமான நிலையத்தில் பெருமளவில் திரண்ட ரசிகர்கள், ரஜினியை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர்.
தற்போது ரஜினிகாந்த் முழு ஓய்வில் இருந்து வருகிறார். அவர் பூரண ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், ரஜினி ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. அது அவரது ஆன்மீக குருக்களில் ஒருவரான தயானந்த சரஸ்வதியின் 80வது பிறந்த நாள் விழா. இந்த விழா கோவையில் ஜூலை 20ம் தேதி முதல் 22வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு ரஜினிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாம். அவரும் வருவதாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் எப்போது வருவார் என்பது தெரியவில்லை.
ஒருவேளை ரஜினி கோவை போவதாக இருந்தால் அவரைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கலாம்.