twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியை தரிசிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு!

    By Sudha
    |

    Rajinikanth
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலமடைந்து திரும்பியுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ள அவரது ரசிகர்களுக்கு இன்னொரு சந்தோஷச் செய்தி. கோவையில் ரஜினியை நேரில் காணும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவிருக்கிறது.

    உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையிலும், பின்னர் சிங்கப்பூரிலுமாக சிகிச்சை பெற்றார் ரஜினிகாந்த். அதன் பின்னர் பூரண குணமடைந்து அவர் ஜூலை 13ம் தேதி இரவு சென்னை திரும்பினார்.

    மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு பரபரப்புக்கு மத்தியிலும், சென்னை விமான நிலையத்தில் பெருமளவில் திரண்ட ரசிகர்கள், ரஜினியை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர்.

    தற்போது ரஜினிகாந்த் முழு ஓய்வில் இருந்து வருகிறார். அவர் பூரண ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் ஓய்வெடுத்து வருகிறார்.

    இந்த நிலையில், ரஜினி ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. அது அவரது ஆன்மீக குருக்களில் ஒருவரான தயானந்த சரஸ்வதியின் 80வது பிறந்த நாள் விழா. இந்த விழா கோவையில் ஜூலை 20ம் தேதி முதல் 22வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு ரஜினிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாம். அவரும் வருவதாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் எப்போது வருவார் என்பது தெரியவில்லை.

    ஒருவேளை ரஜினி கோவை போவதாக இருந்தால் அவரைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கலாம்.

    English summary
    Finally, Rajini's fans can expect to see him in public. Reports say that, the superstar has been invited for the 80th birthday celebrations of Swami Dayananda Saraswati, to be held in Coimbatore from July 20 to 22. Rajinikanth is believed to have graciously accepted the invitation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X