Don't Miss!
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வில்லன் ஆகும் ஹீரோ!
இது ஹீரோக்கள் வில்லன்களாக அவதாரமெடுக்கும் காலம் போலிருக்கிறது.
அஞ்சாதேயில் பிரசன்னா, நாணயம் படத்தில் சிபிராஜ் என ஹீரோ-வில்லன்கள் வரிசையில் இப்போது புதிதாக ஒருவர் சேர்ந்துள்ளார். அவர்... ரமணா.
அந்த நாள் ஞாபகம், நாயகன் என ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர்... இப்போதும் ஹீரோவாக நடித்துக் கொண்டுள்ள ரமணா, தோல்பாவை தியேட்டர்ஸ் தயாரிக்கும் தொட்டுப்பார் படத்தில் அசத்தல் வில்லனாக உருவெடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்த வேடம் ஏற்கத் தயங்கிய ரமணாவிடம், படத்தில் அவரது பாத்திரம் பற்றி இயக்குநர் கூறியதும் பட்டென சம்மதம் சொன்னாராம். கிட்டத்தட்ட கில்லியில் பிரகாஷ் ராஜ் ஏற்றது போன்ற பட்டாசு கிளப்பும் பாத்திரமாம் இது.
பேரரசு உதவியாளர் நந்து இயக்கும் இந்தப் படத்தில், விதார்த - லக்ஷனா ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களைத் தவிர அழகம்பெருமாள், சிங்கமுத்து, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிக்கின்றனர்.
படம் பற்றி நந்து கூறும்போது, "படம் முடிந்துவிட்டது. யார் யாரை தொட்டுப் பார்க்கணும் என்பது ஒரு வரி கதை. ஆக்ஷன், காமெடி, குடும்பம், சென்டிமென்ட் எல்லாம் சேர்ந்த கலவையாக படம் உருவாகியிருக்கிறது. ஹீரோவாக நடித்து வந்த ரமணாவிடம் இந்தப் படத்தின் வில்லன் வேடத்தை சொன்னதும் முதலில் மறுத்தார். பிறகு கேரக்டரை கேட்டதும் நானே நடிக்கிறேன் என்றார். இதுவரை தமிழ்சினிமா பார்க்காத கேரக்டராக அவரது கேரக்டர் இருக்கும்" என்றார்.