மீண்டும் ஊமை விழிகள்... விஜயகாந்த் வேடத்தில் சரத்குமார்!

அந்தப் படம் மீண்டும் தமிழில் தயாராகி வரப்போகிறது!
ஆபாவாணன் ஆசியோடு, திரைக்கதையில் சில மாற்றங்களுடன் வின்சென்ட் செல்வா இந்தப் படத்தை இயக்குகிறார். ப்ரியமுடன், யூத், வாட்டாக்குடி இரணியன் போன்ற படங்களைத் தந்தவர் வின்சென்ட் செல்வா என்பது நினைவிருக்கலாம்.
ஊமை விழிகளில் விஜயகாந்துக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்த அந்த போலீஸ் அதிகாரி வேடத்தை, இந்த முறை சரத்குமார் ஏற்றுள்ளார்.
படத்தின் இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
Comments


Click it and Unblock the Notifications