Don't Miss!
- News அவமானப்படுத்திய இன்ஸ்பெக்டர்.. கான்ஸ்டபிள் வேலையை தூக்கி எறிந்து விட்டு யுபிஎஸ்சியில் சாதித்த இளைஞர்
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நடிகர் ஜெய்யின் 19 வருட ஆசை நனவானது...உருக்கமாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு வைரல் !!
சென்னை : நடிகர் ஜெய் இப்பொழுது சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
அதில் ஒரு படத்திற்கு சிவசிவா என டைட்டில் வைக்கப்பட்டிருக்க அதில் இவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி நடித்துள்ளார்.
திரைப்படங்கள் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும்…. சிவகார்த்திகேயன் விருப்பம் !
இன்று மாலை சிவ சிவா படத்திலிருந்து முதல் சிங்கிள் டிராக் காட முட்டை வெளியாக இருக்கும் நிலையில் 19 வருட கனவு நினைவாகிறது என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தம்பியாக
தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெய். தன்னுடைய படங்களில் இயல்பான நடிப்பின் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கும் ஜெய் முதன்முறையாக விஜய்யின் பகவதி படத்தின் மூலம் அறிமுகமானார். ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய்க்கு ஆக்சன் பரிமாணத்தை கொடுக்க பகவதி திரைப்படத்தில் தம்பியாக நடித்திருப்பார்.
சிவசிவா
அதன் பிறகு சென்னை 28 மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜெய் இப்பொழுது தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இப்பொழுது சுசீந்திரன் இயக்கத்தில் குற்றமே குற்றம் என்ற படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து சிவசிவா என்ற படத்தில் நடித்து வருகிறார். பக்கா வில்லேஜ் கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி நடித்துள்ளார். இவர்களுடன் சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள்தாஸ், இயக்குனர் முக்தார் கான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஐஸ்வர்யா தயாரித்து வருகிறார்.
இசையமைப்பாளராக அறிமுகம்
இந்த படம் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் சமீபத்தில் சிவசிவா படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. குறிப்பாக அதில் இடம்பெற்ற பிஜிஎம் இசை அனைவரையும் கவர்ந்திருந்தது. சிவசிவா படத்தில் ஹீரோவாக மட்டுமல்லாமல் இசையமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் ஜெய் அறிமுகமாகிறார். இதுவரை நடிகராக அனைவருக்கும் பரிச்சயமான ஜெய் இப்பொழுது இசையமைப்பாளர் என்ற புதிய பரிமாணத்தை எடுத்திருக்க அதுகுறித்த உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் .
நன்றியுடையவனாக இருப்பேன்
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்பதே என்னுடைய கனவு ஆனால் எதிர்பாராத விதமாக நான் நடிகனாகி விட்டேன். உண்மையில் அது ஒரு இனிமையான விபத்து. அதற்காக எப்பொழுதும் நன்றியுடையவனாக இருப்பேன். ஆனால் இசை கனவில் என்னுடைய பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
19 வருட கனவு
திரைத்துறையில் இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்பதே என்னுடைய கனவாக இருந்தது.19 வருட கனவு இன்று சிவ சிவா படத்தின் மூலம் நினைவாகிறது.
நான் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சிவசிவா படத்திலிருந்து முதல் பாடல் "காட முட்டை" செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது. என்னுடைய வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. மேலும் "கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி உடன் செயல்படும் போது கனவுகள் நனவாகும்" என்று அதில் பதிவிட்டுள்ளார் .