twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆசியாவின் செக்ஸியான ஆணாக ரன்பிர் கபூர் தேர்வு: ஜான் ஆப்ரகாம், ரித்திக்குக்கு 2, 3-வது இடம்

    By Sudha
    |

    மும்பை: பாலிவுட் இளம்நாயகன்களில் ஒருவரான ரன்பிர் கபூர் ஆசியாவிலேயே செக்ஸியான மனிதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் ஜான் ஆப்ரகாம், ரித்திக் ரோஷன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார் அவர்.

    லண்டன் வாரப்பத்திரிக்கையான ஈஸ்டர்ன் ஐ நடத்திய கணக்கெடுப்பில் ரன்பிர் (28) தேர்வாகியுள்ளார்.

    இத்தேர்வு குறித்து ரன்பீர் கபூர் கூறுகையில், பெண்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் ஏதோ தவறு இருப்பதாக நான் உணர்கிறேன். என் ரசிகர்களில் பெரும்பாலானோர் பெண்கள். இத்தனை பெண்களுக்கு என்னை பிடித்திருக்கிறது என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் ரன்பிர் கபூர்.

    இது குறித்து ஈஸ்டர்ன் ஐ பத்திரிக்கையின் ஆசிரியர் அஸ்ஜாத் நசீர் கூறியதாவது,

    ரன்பிர் அநேக ஓட்டு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எப்பொழுதும் அனைத்து போட்டியாளர்களுக்கும் இடையே பெரிய அளவு ஓட்டு வித்தியாசம் இருக்காது. ஆனால் இந்த ஆண்டு நிறைய ஓட்டு வித்தியாசம் உள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல என்று அவர் கூறினார்.

    ரன்பிர் கபூர் சஞ்சய் லீலா பன்சாலியின் படம் சாவரியா மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாவிட்டாலும் அஜப் பிரேம் கி கசாப் கஹானி, வேக் அப் சித் மற்றும் ரஜினிதி ஆகிய படங்கள் ரன்பிருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தன.

    பாலிவுட் நாயகன் ஜான் ஆப்ரகாம் இரண்டாவது இடத்தையும், ரித்திக் ரோஷன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    ரான்பிருடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்ட கத்ரீனா கைப் ஈஸ்டர்ன் ஐ-ன் உலகின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ranbir Kapoor has been selected as the sexiest Asian man by Eatern eye, a London weekly. Bollywood hunk John Abraham secured the second, while Hrithik Roshan secured the third place.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X